Friday, May 10, 2013

வாழ்வு...


கனவு கண்டா 'நிஜம்
மாதிரியே இருந்துச்சு'னு பயந்துக்கறதும்,
நிஜத்தை 'கனவு மாதிரி
இருந்தது' என
வியந்துக்கறதுமாய்
இருக்கிறது வாழ்வு...!

துயரங்களுக்கும் ஆசைகளுக்கும் எப்போதும் பஞ்சமில்லை மனதில்...


எப்போது கடக்கும் என நினைக்க சில துயரங்களுக்கும்
எப்போது நடக்கும் என நினைக்க சில ஆசைகளுக்கும்
எப்போதும் பஞ்சமில்லை மனதில்...

புன்னகை...


என் வலிகளை மறைக்க
என்னை விட
என் உதடுகள் பழகிவைத்துள்ளது
புன்னகை...

அம்மா...


சாப்பிட மறந்து விட்ட வே(லை)ளைகளின் முடிவில்
பசியாய் நினைவுக்கு வருவாள் அம்மா...

பெண்ணே...


முப்பொழுதும் உன் கற்பனையில் திரிந்தவனை
பரதேசியாய் மாற்றியவள் நீ பெண்ணே...

சொர்க்கம்...


சொர்க்கம் என்பது சிறுவயதில்
அம்மாவோடு படுத்து உறங்கிய நாட்கள்...

நட்புக்குள் பிரிவுகள் நிரந்தரம் அல்ல...

நட்புக்குள் பிரிவுகள் நிரந்தரம் அல்ல
நம்மை நாம் உணரவே
சில தடவை பிரிவுகளை நாம் விரும்பி ஏற்கிறோம்...

வாழ்க்கையே ஒரு நாடக மேடை...

வாழ்க்கையே ஒரு நாடக மேடை - அதில்
நாம் கஷ்டப்பட்டாலும்
பிறரை ரசிக்க வைக்க
நடித்துதான் ஆகனும்...

காதல் , கண்ணீர்...

இன்பம் துன்பம் இரண்டும் தருவது காதல்
உண்மையான காதலின் சாட்சி கண்ணீர்...

மறக்க நினைப்பதில்லை...

நமக்கு அருகில் இருந்தால் அருமை தெரிவதில்லை
தொலைவில் இருந்தால் மறக்க நினைப்பதில்லை...
PAKEE Creation