skip to main |
skip to sidebar
எங்கிருந்தோ வந்தால்
என் வாழ்கையில் தோன்றினால்
அவள் யார் என்று நான் அறியேன்
என் மனமறியும் என்றது
அவள் புன்னகைத்தால்
பூக்கள் புன்னகைப்பதை கண்டேன்
அவளிடம் பேச முயன்றேன்
வார்த்தைகள் வற்றி மௌனம் பேசினேன்
மற்ற பெண்ணில் இல்லாத ஒன்று
இவள் பெண்மையில் கண்டேன்
அது என்னவோ நானறிய முயன்றேன்
என் மனதை தொலைத்து நின்றேன்
மன போதைஎன்றால்
ஒரு நொடியில் மறந்திருப்பேன்
இதுதான் காதல் என்றால்
அந்த காதலின் வாருகைக்காக காத்திருப்பேன்...
என்னை மறந்தே வேளையிலே
மெல்லிய பூங்காற்று என்மேல் விசியது
பறவைகளின் தாழட்டிலே
தனிமையோ என்னை சுத்துது
கண் இமைகள் மெய்மறக்கையிலே
மங்கை ஒருவளின் நிழல் முன்னே நின்றது
அழகியே அவளது விழியிலே
நாணம் ஒன்றே தெரிந்தது
அடக்கமான அவள் சிரிப்பிலே
என் மனம் ஏனோ சொக்கி போனது
மங்கையவள் வார்தையிலே
மௌனம் ஒன்றே என்னை ஆள்த்தது
அவள் யாரென்று என் மதி அறியலையே
அழகிய புன்னகை ஒளி ஒன்றே இன்று என் வசமானது...
என் இரவுகள் அவள் குரல் கேட்டே விடிந்தது
என் விடியல்கள் அவள் முகம் பார்க்க துடித்தது
என் விரல்கள் அவள் தலை கோத விழைந்தது
என் சுவாசம் அவள் வாசத்தால் நிறைந்தது
என் குறும்புத்தனங்கள் முழுதும் அவளின்
செல்ல கோபத்திற்கவே உருவானது
நான் வாங்கும் பொருட்கள்
எல்லாம் அவளாலே அழகானது
ஏனோ நான் காதல் சொன்ன போது அவளின்
மொழி மட்டும் மௌனமானது..!
நீ என்னை வெறுக்கிறாய் என்று எனக்கு தோணும் போது
நானும் உன்னை காதலிப்பேன்
நீ என்னை பிரிந்து விடுகிறாய் என்று எனக்கு தோணும் போது
நானும் அந்த தவிப்பை அனுபவிப்பேன்
நீ என்னை எப்போது நினைக்கிறாய் என்று எனக்கு தோணும் போது
நானும் உன்னை நினைப்பேன் உன் வருகைக்காக
நீ எப்போது தனியாக தவிக்கிறாய் என்று எனக்கு தோணும் போது
நான் நிச்சயமாக உன்னை அடைந்து விடுவேன்...