skip to main |
skip to sidebar
என்னுள் பூத்த முதல் கவிதை நீ
எனக்குள் உறைந்த உயிர் நீ
என் சுவாசத்தில் கலந்த காற்று நீ
என் இதயமெனும் கோவிலில்
குடியிருக்கும் தெய்வம் நீ...
என் இதயத்தை பாறையாக தான் வைத்திருந்தேன்
நீயோ உளியாக வந்தாய்
சிலையாக வடிப்பாய் என்று நினைத்தேன்
ஆனால் நீயோ
என்னை சிதைத்து விட்டாய் பெண்ணே...
நீயும் நானும்
இரட்டை குழந்தைகள்
நாம் இதய கருவறையில்...
என்னை விட்டு சென்ற
உன்னை இன்னும்
காதலித்து கொண்டுதான் இருக்கிறேன்
உன்னை மறக்க தெரியாமல் இல்லை
உன்னை மறக்க முடியாமல்...
கடவுளை வழிபட ஆசை தான்
ஆனால்
வழிபடும் அந்த ஒரு
நொடியில் உன்னை மறந்து
கடவுளை நினைத்து விடுவேனோ
என்ற பயம் எனக்கு...
ஒரு முறை
நீ
என் கனவில் வரவேண்டும்
என்பதற்காய்
ஒரு ஆயிரம்
தூக்க மாத்திரைகளையும்
நான் சாப்பிட தயார்...
நிலாவின் அழகை சொல்லுவதை விட
அதை பார்த்தல் தான் தெரியும்
அதே மாதிரி காதல் பற்றி
சொல்லுவதை விட
காதலித்து பார் புரியும்...
நான் அதிகாலையில்
எழுந்து கண் விழிப்பது
என்கவிதைகளில் தான்
ஏன்
என்றால் அவைகள் அனைத்திலும்
உன் புகைப்படங்கள்...
எல்லோரும் சொன்னார்கள்
உன் வாழ்க்கை உன் கையில் என்று
அவர்களுக்கு எங்கே
தெரிய போகிறது
என் வாழ்க்கை
உன் வார்த்தையில் உள்ளதென்று...
நான் சிரித்தாலும் சரி
எனக்கு வலித்தாலும் சரி
கண்ணீர் என் அம்மாவின்
கண்களில் மட்டும் தான்...
என்
கண்களுக்கு
இமைகளும் சுமைதான்
உன்னை
பார்க்காத நாட்களில்...
கடவுள் கூட
எதையாவது
சாதிக்க வேண்டும்
என்று நினைத்து தான்
உன்னை
படைத்து இருக்கிறான்...