Saturday, March 1, 2014

இயற்கையின் விந்தைக் கரங்கள்...

மனிதன் காலை வைக்ககூட
இஷ்டப்படாத சேற்றிலிருந்து அவன் எடுத்து
மணந்து இன்பப்படும் தாமரை முளைக்கிறது

தொட்டால் குத்துமே என்று அவன் வெறுக்கும்
முட்களுள்ள மடல் கூட்டத்தில் பிறக்கிறது
அவன் ஆசையுடன் எடுத்து மகிழும் தாழை மலர்

கையில் பட்டாலே அடுத்த வினாடி 
நீர் விட்டுக் கழுவிகொள்ளும் கரியிலிருத்து 
அவன் பெருமையுடன் நகைகள் செய்து
அணிந்து கொள்ளும் வைரம் விளைகிறது 

வெட்டி தூர எறியும்
சிப்பியிலிருந்துதான்
கட்டி முத்து கிடைக்கிறது

இயற்கையின் விந்தைக் கரங்கள்
கெட்டதிலிருந்து அழகையும்
அதிலிருந்து நல்லதையும்
உருவாக்கி விடுகின்றன...

No comments:

Post a Comment

PAKEE Creation