Saturday, March 1, 2014

நான் கற்றுக்கொள்ளப் பல விஷயங்களிருக்கின்றன...

இந்த உலகத்தில் இன்னும் நான்
கற்றுக்கொள்ளப் பல விஷயங்களிருக்கின்றன
நாம் ரொம்ப நல்லவர்கள் என்று எண்ணிகொண்டிருப்பவர்கள்

பொல்லாதவர்களாகி விடுகிறார்கள்
பொல்லாதவர்கள் என்று நினைத்தால்
நல்லவர்களாகி விடுகிறார்கள்
ஆனால்
நடந்து போன நாட்கள் எல்லாம் வேறு விதமாய்
நடந்திருக்க கூடாதா என்று தினந்தோறும் தோன்றும்
அதுவும் ஒரு கற்பனை
இனி எதிர்காலம் எப்பிடி நடக்க வேண்டும்
என்று யோசிப்பதும் கற்பனையே
இப்பிடி நிகழ்காலத்தை
அந்தக் கற்பனைப் பனி மூட்டம் மூடுகிறது
திடமாய் நிற்கும் மலையை மூடும் மேகக் கூட்டம் போல

இந்தக் கஷ்டமெல்லாம் என்னத்திற்காக
எப்போது முடியப் போகிறது என்று தெரியவில்லை...

No comments:

Post a Comment

PAKEE Creation