Saturday, March 1, 2014

தெய்வம் உண்டா இல்லையா?...

தெய்வம் உண்டா இல்லையா?
ஆதிகாலம் முதல் மனிதன் தன்னை தானே
கேட்டு வரும் கேள்வி இது 

அவ்வப்பொழுது பதிலும் சமயோசிதமாக வந்திருக்கிறது

உடலில் கொழுப்பும் ரத்த வேகமும் உள்ள சமயங்களில் 
மனிதனின் மனத்தில் நாத்திகமும் 

அந்தச் சக்திகள் அகன்றதும் ஆத்திகமும் எழுந்து நிற்பதே 

இயற்கையாக இருந்து இருக்கிறது 

கொழுப்பும் ரத்த வேகமும் நிரம்பியவர்களுக்கும் 
அவர்கள் முயற்சிகள் தோல்வியடையும்போது 
தெய்வ சிந்தனை உண்டாகிறது 
"தெய்வம் இருக்கிறது அதன் சக்தி தான் பிரதான சக்தி"
என்பதை உணருகிறார்கள் 

இந்த உண்மைய வலியுறுத்தவே ஓர் ஆங்கில ஆசிரியர் 
"மனிதப் பிரயத்தனங்கள் அனைத்தும் தோல்வி அடையும் போது 

தெய்வம் பிறக்கிறது" என்று சொன்னார்...

No comments:

Post a Comment

PAKEE Creation