Saturday, March 1, 2014

மண்...

நாம் வாழும் மண்
எந்த வித்தியாசத்தையும் காட்டுவது கிடையாது
எந்த ஜீவராசிகளையும் சமமாகப் பாவிக்கிறது
மண் தாய் அவள் தான் குழந்தைகளில்
யாரையும் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை
எல்லோரையும் அழைத்துக்கொள்கிறாள்
என்றாவது ஒரு நாள்.

மண்ணிடமிருந்து வருகிறோம்
மண்ணால் வளர்கிறோம்
மண்ணுக்கே போகிறோம்
மண்ணுக்குக்கீழ் எல்லாம் சமம்...

No comments:

Post a Comment

PAKEE Creation