Saturday, March 1, 2014

தாய்மை...



பெண்ணிடம் தாய்மை தத்துவத்தைப் படைத்து விட்ட ஆண்டவன்
முதன் முதலில் அவர்கள் அந்தப் பேற்றை அடையும் போது
கருவிலே வளரும் குழந்தையை எண்ணி
அந்த தாய் இன்ப நினைவும்
அந்த குழந்தை நல்ல படியாக பிறந்து 

நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமே என்ற கவலையும் 
அதனால் ஏற்படும் இடர்களுமாகப் பலவித உணர்ச்சிகளை 
அடைய வைத்து விடுகிறான்...

தாயின் வயிறேனும் சுவர்க்க கமலத்தினின்று 
ஆசாபாசங்கள் நிறைத்த மண்ணிலே விழுந்தவுடன் 
எழுப்பும் ஒலி கேட்டவுடன் தாய் எல்லா நினைவுகளையுமே 
விட்டு விடுகிறாள்...

No comments:

Post a Comment

PAKEE Creation