Thursday, July 3, 2014

சரித்திரம்...

எது சரித்திரம்?
மக்கள் அறிந்ததே சரித்திரம்
அவர்கள் ரத்தத்தோடு ரத்தமாக
கலந்து விட்ட நிணைகளே சரித்திரம்
"நாம் நீர்க்குமிழிகள் அல்ல
வடியாத பெருவெள்ளத்தின் துளிகள் நாம்"
அற்ப வாழ்வுடைய தனிமனிதர் அல்ல
அழிவற்றதோர் பரம்பரையின் உறுப்பினர் நாம்
நேற்று இருந்தோம் , இன்று இருக்கிறோம்
நாளைக்கும் இருப்போம் என்று
தோள்தட்டத் தூண்டுவதே சரித்திரம்...

No comments:

Post a Comment

PAKEE Creation