Thursday, July 3, 2014

சுமை...

வீடு என்கிற சுமையை விட்டு விட்டு
ஓடப் போகிறேன் என்கிறாய்
ஆனால் உன்னுடைய உடல் என்கிற
சுமை உன்னோடுதான் வரும்
பெற்றோரையும் சகோதரர்களையும்
உற்றார்களையும் உறவினர்களையும்
விட்டுவிட்டு ஓடப்போகிறேன் என்கிறாய்
ஆனால் உன்னுடைய அகங்காரம் , உன்னுடைய ஆசை , உன்னுடைய கோபதாபம் யாவும்
உன்னுடன் தானே வரும்...

No comments:

Post a Comment

PAKEE Creation