Saturday, January 31, 2015

மனசு...


நாடு நாகரிகத்தில் திளைக்கிறது
செயற்கையை வளர்க்கிறது
இயற்கை வாழ்விலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்கிறது

காடு அப்பிடியில்லை
கட்டுப்பாடு இல்லை கேட்பார் இல்லை
இயற்கை கொடுக்கிறது உரம்
சுதத்திரம் அளிக்கிறது சூழ்நிலை
கவலையற்று வளர்கிறது காட்டுச்செடி
அதன் மலர்களுக்கு மனிதன் பறித்துவிடுவானே என்ற
அச்சமில்லை
அதனால் செழித்து வளர்ந்து மலர்ந்து
காற்றில் விளையாடுகிறது
இயற்கையோடவே வாழ விரும்புகிறது மனசு...

No comments:

Post a Comment

PAKEE Creation